தனிநபர் வரி விவரங்களை வெளியிடவிருக்கும் முதல் பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ்
பிரிட்டனில் அரச குடும்பத்தின் நிதிநிலைமை மீது பொதுமக்களின் பார்வை அதிகரித்து வரும் நிலையில், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் முயற்சியாக, மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது தனிப்பட்ட வரி விவரங்களை வெளியிடுவார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் மன்னர்கள் சில வரிகளைச் செலுத்துவதிலிருந்து சட்டப்படி விலக்கு பெற்றிருந்தாலும் பல தசாப்தங்களாக அவர்கள் சில வரிகளைத் தாங்களாகவே முன்வந்து செலுத்தி வருகின்றனர்.
மேலும், அவர்கள் தங்களின் தனிப்பட்ட வரி விவரங்களை வெளியிட வேண்டிய கட்டாயமும் இல்லை. ஆனால், அவப்பெயர் பெற்ற முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரைச் சுற்றியுள்ள சமீபத்திய சர்ச்சைகள், அரச குடும்பத்தின் நிதிநிலைமையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன.
"மன்னராக இதைச் செய்வதற்கான முடிவு, மன்னரின் நேரடி விருப்பத்தின் பேரிலேயே எடுக்கப்பட்டுள்ளது," என்று அரண்மனை செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே