பிரபல ஈரானிய பாடகிக்கு 74 கசையடிகள் தண்டனை
ஈரானியப் பாடகி பரஸ்தூ அஹ்மதி, ஹிஜாப் அணியாமல் இணையவழி இசை நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக 74 கசையடிகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டில் தனது யூடியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட ஒரு இசை நிகழ்ச்சிக்காக, அஹ்மதி மற்றும் இசைக்கலைஞர்கள் உட்பட அவரது தயாரிப்புக் குழுவைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
ஈரானின் கோம் மாகாணத்தில் உள்ள ஒரு குற்றவியல் நீதிமன்றம், அந்தக் குழுவிற்கு 74 கசையடிகள், நாட்டை விட்டு வெளியேற இரண்டு வருடத் தடை மற்றும் கலை நடவடிக்கைகளில் பங்கேற்க இரண்டு வருடக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
"ஆபாசமான மற்றும் ஒழுக்கமற்ற உள்ளடக்கம்" எனக் கருதப்படும் உள்ளடக்கத்தை உருவாக்கிப் பகிர்ந்ததன் மூலம் பொது ஒழுக்கத்தை மீறியதாக அந்தக் கலைஞர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தத் தண்டனையை மனித உரிமை ஆர்வலர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த ஈரானிய மனித உரிமைகள் மையத்தின் பஹார் கந்தேஹரி, இந்தத் தண்டனையானது அந்நாட்டில் மனித உரிமைகள் நிலைமைகள் பெருமளவில் மாறாமல் இருப்பதற்கான சான்று என விவரித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே