ஒன்பதாவது வாரமாகவும் மயிலிட்டியில் மக்கள் போராட்டம்
#SriLanka
#M. A. Sumanthiran
#Protest
#government
#Lanka4
#land
#L4
Prasu
3 hours ago
36 வருடங்களாக இராணுவப் பிடியில் இருக்கும் தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரி ஒன்பதாவது வாரமாகவும் அமைதி வழியில் மயிலிட்டியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களும் போராட்ட நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார்.

மே 28, 2013ல் வெளியிடப்பட்ட நிலம் கையகப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பு 1812/10ஐ உடனடியாகத் திரும்பப் பெறுமாறு கோரி பத்தாயிரம் தபாலட்டைகள் சேகரிக்கும் நிகழ்வு இன்று ஆரம்பமாகியது.
மேற்படி தபாலட்டைகளை ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பி வைக்கவுள்ள தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே