சுவிற்சர்லாந்தில் நாளை இடம்பெறவுள்ள முக்கிய பேச்சுவார்த்தை
#Switzerland
#America
#Lanka4
#Iran
#discussion
#L4
Prasu
4 hours ago
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுவிற்சர்லாந்தில் நாளை இடம்பெறவுள்ளதை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த முக்கியத்துவமிக்க சந்திப்பில் பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் சமரசத் தீர்வாளர்களாகப் பங்கேற்று இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை அமுல்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளன.
ஏற்கனவே இரு நாட்டுத் தலைவர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இணைய வழியில் கையெழுத்திட்டுள்ள நிலையில், இந்த நேருக்கு நேர் சந்திப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இச்சந்திப்பு நடைபெறாது என்று ஈரான் முன்னதாகத் தெரிவித்திருந்த நிலையில், சுவிட்சர்லாந்து தற்போது இந்த அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
இந்த சந்திப்பிற்கான விரிவான கால அட்டவணை மற்றும் கூடுதல் தகவல்கள் இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே