கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை!
#SriLanka
#water
#Gampaha
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளைய தினம் 19 மணிநேரம் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்தனகல்லவில் உள்ள கரஸ்நாகல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் அறிவிப்பின்படி, நாளை (16) காலை 8.00 மணி முதல் புதன்கிழமை (17) அதிகாலை 3.00 மணி வரை நீர் விநியோகம் தடை செய்யப்படும்.
இந்த நீர் விநியோகத் தடை மினுவாங்கொட, கம்பஹா, மஹாரா, அத்தனகல்ல மற்றும் நிட்டம்புவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களைப் பாதிக்கும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே