சுரேஷ் சலேவுக்கு தினசரி சட்ட ஆலோசனை வழங்கக் கோரிக்கை : CID நிராகரிப்பு!
முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் (SIS) மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலேவுக்கு தினசரி சட்ட ஆலோசனை வழங்கக் கோரிய கோரிக்கையை CID நிராகரித்துள்ளது.
இந்த முடிவை CID பணிப்பாளர் ஷானி அபேசேகர, சல்லேயின் மனைவி மனோரி சல்லேவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தனது கணவரின் வழக்கறிஞர் அசிதா சிறிவர்தன, வாரத்தில் ஐந்து நாட்கள் அவரைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று மனோரி சல்லே CID-யிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தக் கோரிக்கைக்குப் பதிலளித்த CID பணிப்பாளர், சல்லே தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நடைபெற்று வரும் எந்தவொரு புலனாய்வு நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபடவில்லை என்றும், எனவே அவர் தினசரி சட்ட ஆலோசனைகளைப் பெற வேண்டிய உடனடித் தேவை இல்லை என்றும் தெரிவித்தார்.
சட்ட ஆலோசகருடனான அடிக்கடி சந்திப்புகள், கைதி குணமடைவதற்குத் தேவையான மன ஓய்வைப் பறித்து, அவரது உடல்நிலையில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் CID பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே