மின்சாரம் தாக்கி இரு காட்டு யானைகள் உயிரிழப்பு!

#SriLanka #Elephant #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
மின்சாரம் தாக்கி இரு காட்டு யானைகள் உயிரிழப்பு!

புத்தல - ஒக்கம்பிட்டிய பகுதியில் மின்சாரம் தாக்கியதில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

 கரும்புச் தோட்டம் ஒன்றிற்கு சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கியே இந்த விலங்குகள் இரண்டும் உயிரிழந்திருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

 சுமார் ஒரு வயது மற்றும் இருபது வயதுடைய இரண்டு யானைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளன. 

 இச்சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன  மேலதிக விசாரணைகளை ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளும், மொனராகலை வனவிலங்கு அலுவலக அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4