இலங்கையில் தோட்டப்பயிர் முதலீட்டு மோசடிகள்: மத்திய வங்கி விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

#SriLanka #Bank #Central Bank #Investment #Warning #plantain #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
இலங்கையில் தோட்டப்பயிர் முதலீட்டு மோசடிகள்: மத்திய வங்கி விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

மக்களுக்கு தெளிவு கிடைக்க வேண்டிய சில முக்கியமான கேள்விகள் உள்ளன: இவ்வகை நிறுவனங்கள் பல ஆண்டுகளாக திறந்தவெளியில் செயல்பட்டு வருகின்றன. அவை இயங்க அனுமதி வழங்கியது 

எந்த அதிகார அமைப்பு? இந்நிறுவனங்களில் முதலீடு செய்வதால் மக்கள் ஏமாறும் அபாயம் உள்ளது எனின், ஏன் அவற்றுக்கு எதிராக உடனடி தடை அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை? இந்நிறுவனங்கள் மறைமுகமாக அல்லாமல் வெளிப்படையாக அலுவலகங்கள், விளம்பரங்கள் மற்றும் முகவர்களுடன் செயல்படுகின்றன. 

எனவே அவற்றை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் அரசாங்கத்திற்கும் மத்திய வங்கிக்கும் சிரமம் இருக்கக் கூடாது. 

இருப்பினும் ஏன் நடவடிக்கை தாமதமாகிறது? பொதுமக்களிடமிருந்து முதலீடு பெறுவது இவ்வகை Plantation நிறுவனங்களுக்கு சட்டபூர்வமானதா அல்லது சட்டவிரோதமானதா என்பதை மத்திய வங்கி தெளிவாக அறிவிக்க முடியுமா?

ஏற்கனவே இந்நிறுவனங்களில் முதலீடு செய்த மக்களின் பணத்தை பாதுகாக்க அல்லது மீட்டெடுக்க மத்திய வங்கி என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது? ஒரு நிறுவனம் சட்டபூர்வமாக முதலீடுகளை பெறுகிறதா என்பதை பொதுமக்கள் எவ்வாறு சரிபார்க்கலாம்?

எச்சரிக்கை விடுப்பதற்கு முன்பு, மத்திய வங்கி அந்த நிறுவனங்களுக்கு எதிராக விசாரணை நடத்தியதா? நடத்தியிருந்தால் அதன் முடிவுகள் என்ன?

இவ்வகை நிறுவனங்களை விளம்பரப்படுத்தும் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக தளங்கள் மீதும் எந்த கட்டுப்பாடுகள் உள்ளன? இந்த கேள்விகளுக்கான தெளிவான பதில்கள் கிடைத்தால், பொதுமக்கள் பாதுகாப்பான முதலீட்டு முடிவுகளை எடுக்க உதவியாக இருக்கும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4