புலம்பெயர்ந்தோரை சுரண்டும் மனித கடத்தல்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த போப் லியோ
ஸ்பெயினின் கேனரி தீவுகள் வழியாக ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும், உதவியற்ற நிலையில் உள்ள புலம்பெயர்ந்தோரைச் சுரண்டும் மனிதக் கடத்தல்காரர்களுக்கும் குற்றக் குழுக்களுக்கும் போப் லியோ கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அவர்கள் கடவுளுக்கு முன்பாக "மனம் வருந்த வேண்டும்" அல்லது நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்தோரை மனிதாபிமானத்துடன் நடத்துமாறு உலகத் தலைவர்களை வலியுறுத்திய போப் லியோ, ஸ்பெயினில் ஒரு வார கால சுற்றுப்பயணத்தின் இறுதி நாளில் மக்களின் அவநம்பிக்கையைப் பயன்படுத்திக் கொள்பவர்கள் மற்றும் மரணப் பாதைகளை ஏற்பாடு செய்பவர்கள்" குறித்து நேரடியாகப் பேச விரும்புவதாக லியோ குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கையில் தீமை செய்த ஒருவர் தனது பாவங்களை ஒப்புக்கொண்டு பரிகாரம் செய்ய வேண்டும் அல்லது மரணத்தில் நரகத்திற்கு அனுப்பப்படுவார் என்ற கத்தோலிக்க நம்பிக்கையை அவர் மேற்கோள் காட்டினார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே