சுரேஷ் சலேவின் தடுப்புக்காவல் உத்தரவை நீக்குக! ஜனாதிபதிக்கு கடிதம்!
#SriLanka
#Letters
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#Suresh Sallay
Thamilini
1 month ago
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் தடுப்புக்காவலை உடனடியாக இரத்து செய்யுமாறு கோரி அவரின் மனைவி மனோரி சலே ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்தில், சுரேஷ் சலேயை தடுப்புக்காவலில் வைப்பது தொடர்பான நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகள் கடந்த மே 20 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும், அந்த நீதிமன்ற நடவடிக்கைகளின் போது நீதிமன்ற உத்தரவுக்கமைய தயாரிக்கப்பட்ட சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த சட்ட வைத்திய அதிகாரியின் முடிவுகளின் மூலம், தடுப்புக்காவலில் இருந்தபோது தனது கணவர் அனுபவித்த உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகள் தொடர்பாக அவர் தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்த விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே