திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மாயமானமைக்கு மத்திய வங்கியும் பொறுப்பு!

#SriLanka #Harsha de Silva #treasure #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்  மாயமானமைக்கு மத்திய வங்கியும் பொறுப்பு!

திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் காணாமல் போனதற்கு இலங்கை மத்திய வங்கியும் (CBSL) பொறுப்பு வகிக்கிறது என திறைசேரி அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளதாக, பொது நிதிக் குழுவின் (COPF) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார். 

 அறிக்கையில் உள்ள கண்டுபிடிப்புகள் குறித்து தனது நிலைப்பாட்டைச் சமர்ப்பிக்க மத்திய வங்கிக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

திறைசேரி நிதிகள் காணாமல் போனது குறித்து விவாதிப்பதற்காக நேற்று (08) நடைபெற்ற பொது நிதிக் குழுவின் கூட்டத்தில் இந்த விவகாரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. 

 இந்த விவாதத்திற்காக திறைசேரி செயலாளர் டாக்டர் ஹர்ஷனா சூரியப்பெரும மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவின் முன் அழைக்கப்பட்டனர். 

இதனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட  ஹர்ஷா டி சில்வா ,  திறைசேரியால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை குழு ஆய்வு செய்ததாகவும், இவ்விஷயத்தில் மத்திய வங்கியின் பங்கு குறித்து மேலும் விளக்கம் கோரியதாகவும்   கூறினார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4