2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் அந்நிய செலாவணி 847 மில்லியன் டொலராக பதிவு!

#SriLanka #Dollar #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #currency
Thamilini
1 hour ago
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் அந்நிய செலாவணி 847 மில்லியன் டொலராக பதிவு!

2026 மே மாதத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து இலங்கை பெற்ற மொத்த வெளிநாட்டுப் பணப் பரிமாற்றத் தொகை 847 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

 மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி, 2025 மே மாதத்தில் பெறப்பட்ட 641.7 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் பணப் பரிமாற்ற வருமானம் 205.3 மில்லியன் அமெரிக்க டொலர் அதிகரித்துள்ளது. 

 மேலும், 2026 ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களால் நாட்டிற்கு அனுப்பப்பட்ட மொத்த வெளிநாட்டுப் பணப் பரிமாற்றத் தொகை 3.90 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 26 சதவீதம் குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். 

மேலும், இலங்கையின் அந்நியச் செலாவணி வருவாயை வலுப்படுத்துவதில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணப் பரிமாற்றங்கள் தொடர்ந்து முக்கியப் பங்களிப்பைச் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

images/content-image/1780706831.jpg


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )






உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!