கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு!
#SriLanka
#Colombo
#Security
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் தலைவரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சாலே அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், ஒழுங்கைப் பேணுவதற்கும், குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் சிறப்பு அதிரடிப்படையின் (STF) பல பிரிவுகளைச் சேர்ந்த பணியாளர்கள் மருத்துவமனைக்கு உள்ளேயும் அருகிலுள்ள இடங்களிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சாலே உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
