கட்டாய உழைப்புடன் தொடர்புடைய பொருட்கள் மீதான வரி விதிப்பு!! அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை!
59 நாடுகள் மீது வரி விதிப்பை அமுல்படுத்தவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டாக்டர் அனில் ஜயந்த பெர்னாண்டோ கருத்து வெளியிட்டுள்ளார்.
பரஸ்பர வரிகள் மற்றும் முன்மொழியப்பட்ட விநியோகச் சங்கிலி ஒழுங்குமுறைகள் தொடர்பில் அமெரிக்காவுடன் மீளவும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் கட்டாய உழைப்பு தொடர்பான கவலைகள் குறித்த மதிப்பீடுகளைத் தொடர்ந்து, இலங்கை உட்பட சுமார் 60 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% முதல் 12.5% வரை கூடுதல் வரிகளை விதிக்க அமெரிக்க நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.
இந்தப் பிரச்சினை எழுந்ததிலிருந்து இலங்கை, அமெரிக்க அதிகாரிகளுடன் இராஜதந்திர வழிகள் மூலம் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும், பரஸ்பர சுங்கவரி ஏற்பாடுகள் குறித்த இறுதி உடன்படிக்கையை விரைவில் எதிர்பார்ப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
கட்டாய உழைப்புடன் தொடர்புடைய எந்தப் பொருட்களும் இலங்கையின் ஏற்றுமதி விநியோகச் சங்கிலிகளில் நுழையாமல் இருப்பதை உறுதி செய்வதே தற்போதைய கலந்துரையாடல்களின் நோக்கம் என்று கூறிய அவர், கவலைகளைத் தீர்ப்பதற்காக தொடர்புடைய தகவல்கள் அமெரிக்க புலனாய்வு அமைப்புகளுடன் பகிரப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
