இரண்டு இஸ்ரேலிய அமைச்சர்கள் மீது பயணத் தடை விதித்த அயர்லாந்து
பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்களிடம் அவர்கள் நடந்துகொண்ட விதம் மற்றும் பாலஸ்தீனியர்களை அவர்களின் தாயகத்திலிருந்து இடம்பெயரச் செய்யும் கொள்கைகளுக்கு ஆதரவளித்ததைக் காரணம் காட்டி, இஸ்ரேலின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென்-க்விர் மற்றும் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகியோர் தங்கள் நாட்டிற்குள் வருவதற்கு அயர்லாந்து தடை விதித்துள்ளது.
'டாவோசீச்' என்று அழைக்கப்படும் அயர்லாந்தின் பிரதமர் மைக்கேல் மார்ட்டின் இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தினார்.
மேலும், இந்த இரண்டு தீவிர வலதுசாரி அமைச்சர்களும் பாலஸ்தீனர்களை பாலஸ்தீனத்திலிருந்து முற்றிலுமாக அகற்றும் விருப்பத்திற்கு ஒப்பான நிலைப்பாடுகளை ஆதரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பென்-க்விர் மற்றும் ஸ்மோட்ரிச் இருவரும், பாலஸ்தீனியப் பகுதிகளை இஸ்ரேல் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும், காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது மனித உரிமை அமைப்புகள் மற்றும் பல வெளிநாட்டு அரசாங்கங்களின் கண்டனத்தைத் தூண்டியுள்ளது.
------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )