இராஜகிரிய, நாவல உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று இரவு 8 மணி வரை நீர் வெட்டு!
அம்பாதலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கொலன்னாவை நோக்கி நீர் விநியோகிக்கும் பிரதான குழாயில் (Main Transmission Pipeline) இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் முறிவு மற்றும் கசிவு காரணமாகவே இந்த அவசர நீர் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நீர் வழங்கல் சபையின் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் தற்போது சம்பவ இடத்திற்குச் சென்று குழாயைச் சீரமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இன்று இரவு 8.00 மணிக்குள் பணிகளை முழுமையாக முடித்து, நீர் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் நீர் விநியோகம் தொடர்பான மேலதிக விபரங்கள் அல்லது அவசரத் தேவைகளுக்கு 1939 என்ற நீர் வழங்கல் சபையின் உடனடித் தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்ள முடியும்.
உயரமான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நீர் விநியோகம் வழமைக்குத் திரும்ப சற்று கூடுதல் நேரமாகலாம் என்பதால், நீரைச் சிக்கனமாகச் சேமித்துப் பயன்படுத்துமாறு சபை கேட்டுக்கொண்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )