குவைத் விமான நிலையத் தாக்குதலில் காயமடைந்த இலங்கையர்கள் குறித்து ஆழ்ந்த கவலை - இலங்கை
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் பொதுமக்கள் உள்கட்டமைப்பு மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இலங்கை நாட்டினர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது என வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை குடிமக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் நலன் ஆகியவை இலங்கை அரசாங்கத்தின் தலையாய முன்னுரிமையாக உள்ளது என அமைச்சு ஓர் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணுவதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அமைச்சு, அனைத்துத் தரப்பினரும் உச்சபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
---------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )