முதியோர் இல்லத்தில் தீவிபத்து - 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல்!
ஹொரணை - படகொடவில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக தீயில் எரிந்த நிலையில் சிலரின் உடல்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 10 தொடக்கம் 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம் விபத்தில் காயமடைந்தவர்கள் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் அருகில் உள்ள பாடசாலையொன்றில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் உயிரிழந்தவர்கள் பற்றிய உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என பாணந்துரை பிரதேச காவல்துறை தலைவர் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் நிஷான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )