பிரித்தானியா முழுவதும் அதீத வெப்ப அலை காரணமாக 15 பேர் மரணம்
#Death
#water
#Lanka4
#heat
#Climate
#England
#hot
#L4
Prasu
3 hours ago
சமீபத்திய வெப்ப அலையின் காரணமாக பிரித்தானியா முழுவதும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான மரணங்கள் நீர் நிலைகளில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரோயல் லைஃப் சேவிங் சொசைட்டி, நீரில் இறங்குவதற்கு முன்பு பாதுகாப்பாகவும் முழு சிந்தனையுடனும் இருக்குமாறு மக்களை வலியுறுத்தியுள்ளது.
அதே நேரத்தில் இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனம் குளிர் நீர் அதிர்ச்சி குறித்தும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
(வீடியோ இங்கே )