பிரான்சில் அதீத வெப்ப அலை காரணமாக ஏழு பேர் மரணம்

#Death #France #Lanka4 #heat #Climate #L4
Prasu
1 month ago
பிரான்சில் அதீத வெப்ப அலை காரணமாக ஏழு பேர் மரணம்

மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை வாட்டி வதைத்த சமீபத்திய வெப்ப அலை தொடர்பாக ஏழு பேர் உயிரிழந்ததாகவும், அவர்களில் ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் பிரெஞ்சு அரசாங்கம் தெரிவித்தது.

"வெப்பத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய ஏழு மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை இன்று என்னால் கூற முடியும்," என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் மௌட் பிரெஜியன் குறிப்பிட்டுள்ளார்.

"தற்போது நாம் சந்தித்து வரும் இந்த நிகழ்வு முடிவுக்கு வந்தவுடன், இறப்பு எண்ணிக்கை மற்றும் குறிப்பிட்ட காரணங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும்" என்றும் பிரெஜியன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஏற்கனவே சாதனை அளவிலான வெப்பநிலையைக் கண்டிருந்த இந்த வெப்ப அலை, மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்பட்டது. 

மேற்கு பிரான்சில் உள்ள எட்டு மாகாணங்கள் ஆரஞ்சு வெப்ப எச்சரிக்கையின் கீழ் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4