இலங்கையில் ஐம்பது இலட்சத்து ஆறாயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட மாம்பழம்

#SriLanka #Temple #Kilinochchi #Lanka4 #Auction #Mango
Prasu
1 month ago
இலங்கையில் ஐம்பது இலட்சத்து ஆறாயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட மாம்பழம்

கிளிநொச்சி பரந்தன் 3ம் வாய்க்கால் பன்னங்கண்டி பிள்ளையார் ஆலயத்தின் வருடார்ந்த மகோற்சவத்தின் 5ம் நாளில் மாம்பழ ஏலம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது விநாயகர் பெருமானுக்கு பிடித்த மாம்பழமே ஏலம் விடப்பட்டிருந்த நிலையில் இருவர் இணைந்து குறித்த பழத்தினை மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் பெற்றதாக கூறப்படுகின்றது.

இது பெரும் தொகையாக 50 இலட்சத்து 6000 ரூபா ஏலம் போனதாக அறியப்படுகிறது. கிளிநொச்சி பரந்தன் 3ம் வாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள பன்னங்கண்டி பிள்ளையார் ஆலயம், அப்பகுதியின் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

இந்த ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின்போது மாம்பழம் ஏலம் விடப்படுவது சிறப்பம்சமாகும்,

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!