பீகாரில் நடந்த சாலை விபத்தில் 13 பேர் மரணம் - 30 பேர் காயம்

#India #Death #Accident #Hospital #Lanka4 #Rescue
Prasu
5 hours ago
பீகாரில் நடந்த சாலை விபத்தில் 13 பேர் மரணம் - 30 பேர் காயம்

பீகாரின் கதிஹார் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை பேருந்து, லாரி மற்றும் பிக்கப் வேன் ஆகியவை மோதிக்கொண்டதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 30 பேர் காயமடைந்துள்ளனர். 

கதிஹார் மாவட்டத்தின் கோதா வட்டாரத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல் கண்காணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். 

விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவித்த நிலையில், காயமடைந்தவர்களில் ஆறு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவரான பேருந்து ஓட்டுநர், வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்த ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் நிதீஷ் குமார் அறிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!