திடீரென மெட்ரோவில் பயணம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தின் தலைநகரான சென்னை, நவீன உள்கட்டமைப்பு வசதிகளில் இந்தியாவிலேயே ஒரு முன்னோடி நகரமாகத் திகழ்ந்து வருகிறது.
அந்த வகையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது மெட்ரோ ரயில் பயண அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதுடன், சென்னையின் எதிர்கால மெட்ரோ விரிவாக்கத் திட்டங்கள் குறித்த உற்சாகமான செய்திகளையும் வெளியிட்டுள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் தொடக்கம் என்பது தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்த காலத்திலேயே வேரூன்றிவிட்டது.
அப்போது ஜப்பான் நாட்டிற்கு நேரில் சென்று, அந்நாட்டின் பன்னாட்டு ஒத்துழைப்பு நிறுவனமான ‘ஜைக்காவிடம்’ (JICA) பேசி, நிதி உதவியைப் பெற்று வந்ததில் அவரது பங்கு மிக முக்கியமானது.
இன்று நாம் அனுபவித்து வரும் முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவைக்கு அவர் அன்று போட்ட அடித்தளமே காரணம்.
அந்த நினைவுகளைச் சுமந்து கொண்டு, பொதுமக்களோடு மக்களாகப் பயணம் செய்த தருணத்தை அவர் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.
(வீடியோ இங்கே )