தற்போதைக்கு நீர்க் கட்டணம் அதிகரிக்கப்படாது: நீர் வழங்கல் சபை உத்தியோகபூர்வ அறிவிப்பு!

#SriLanka #water #Lanka4 #Official #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
தற்போதைக்கு நீர்க் கட்டணம் அதிகரிக்கப்படாது: நீர் வழங்கல் சபை உத்தியோகபூர்வ அறிவிப்பு!

நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்தாலும், மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பிருந்தாலும், நீர் கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை வலியுறுத்துகிறது.

மின்சாரக் கட்டணங்களின் அதிகரிப்பு நீர் கட்டணத்தை நேரடியாகப் பாதிக்காது என்று நீர் வழங்கல் அதிகார சபையின் தலைவர் சந்தன பண்டார சுட்டிக்காட்டுகிறார்.

நீர் வழங்கல் அதிகார சபையின் மொத்த இயக்கச் செலவுகளில் 20% முதல் 30% வரை மட்டுமே மின்சாரத்திற்காகச் செலவிடப்படுவதாக அவர் கூறினார்.

நீர் கட்டணத் திருத்தம் என்பது ஆண்டுக்கு இருமுறை மட்டுமே நடைபெறும் ஒரு கொள்கை என்றும், ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கட்டண மாற்றங்கள் எதுவும் செய்யப்படாது நீர் வழங்கல் அதிகார சபையின் தலைவர் கூறினார்.

அதன்படி, நீர் கட்டணங்கள் தொடர்பாக ஏதேனும் மதிப்பீடு செய்யப்பட்டால், அது ஜூன் 30-ஆம் திகதிக்குப் பின்னறே நடைபெறும் என்று கூறியுள்ளார்

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!