4 நிமிடங்களில் 'காலி'யான ஆர்சிபி டிக்கெட்டுகள்! - சின்னசாமி மைதானத்தில் திரும்புமா பழைய உற்சாகம்?

#India #Cricket #Ticket #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
3 hours ago
4 நிமிடங்களில் 'காலி'யான ஆர்சிபி டிக்கெட்டுகள்! - சின்னசாமி மைதானத்தில் திரும்புமா பழைய உற்சாகம்?

ஐபிஎல் 2026 தொடரின் ஆரம்பப் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ள நிலையில், அதற்கான டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்த 4 நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்து சாதனை படைத்துள்ளன.

கடந்த ஆண்டு ஜூன் 4ஆம் திகதி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சோகத்திற்குப் பிறகு, 10 மாதங்கள் கழித்து ரசிகர்கள் மீண்டும் சின்னசாமி மைதானத்திற்குத் திரும்புகின்றனர்.

இருப்பினும், போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மைதானம் முழுமையாகத் தயாராகிவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது மைதானத்தின் உட்புறம் மற்றும் நுழைவாயில் பகுதிகளில் கட்டுமானப் பணிகள் மற்றும் வர்ணம் பூசும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

"கடந்த நான்கு நாட்களாக நாங்கள் தூங்கவில்லை" என அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற அந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 11 பேரை கௌரவிக்கும் வகையில், வீரர்களின் நுழைவாயிலுக்கு அருகில் நினைவுப் பலகை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், அந்த 11 ஆன்மாக்களின் நினைவாக மைதானத்தில் 11 ஆசனங்கள் எப்போதும் காலியாகவே வைக்கப்படும் என ஆர்சிபி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மீண்டும் அத்தகையதொரு நெரிசல் ஏற்படாமல் இருக்கப் பல புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பெங்களூரு மெட்ரோவுடன் இணைக்கப்பட்ட டிக்கெட் முறை, கூட்ட நெரிசலைக் குறைக்க QR குறியீடு மூலம் வரிசைப்படுத்தப்பட்ட நுழைவு முறை, டிக்கெட் கவுண்டர்களில் ரசிகர்கள் முண்டியடிப்பதைத் தவிர்க்க முழுமையான இணையவழி விற்பனைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஆர்சிபி ஊடகவியலாளர் சந்திப்புகளில் விராட் கோலி பற்றிய கேள்விகளே ஆதிக்கம் செலுத்தும். ஆனால், இம்முறை பாதுகாப்பு, தளவாடங்கள் மற்றும் ரசிகர்களின் நல்வாழ்வு குறித்த கேள்விகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி சனிக்கிழமை போட்டி ஆரம்பமாவதற்குள் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து, பாதுகாப்பான சூழலில் ரசிகர்கள் போட்டியை ரசிப்பார்கள் என கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக espncricinfo செய்தி வெளியிட்டுள்ளது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!