ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேனவிற்கு மீண்டும் விளக்கமறியல்!
#SriLanka
#Director
#Airlines
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
#L4
Abi
3 hours ago
ஏர்பஸ் விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கல்களின் போது, 2 மில்லியன் அமெரிக்க டொலர் கையூட்டலாக கோரியமை மற்றும் பெற்றுக்கொண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது அவரை ஏப்ரல் 02 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்