கிராமிய வீதிகளை பொறுப்பேற்க மத்திய மாகாண சபைக்கு கோரிக்கை: நோர்வூட் பிரதேச சபை தீர்மானம்!

#SriLanka #Province #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
1 hour ago
கிராமிய வீதிகளை பொறுப்பேற்க மத்திய மாகாண சபைக்கு கோரிக்கை: நோர்வூட் பிரதேச சபை தீர்மானம்!

நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட கிராமிய கார்பெட் பாதைகளை மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறுப்பேற்று பராமரிக்க வேண்டும் என நோர்வூட் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் (செவ்வாய்) ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நோர்வூட பிரதேச சபை நிர்வாக எல்லைக்கு உட்பட்ட பொகவந்தலாவ - ராணிக்காடு, சென் ஜோன் டிலறி - கியூ, டின்சின் - டில்லறி, நோர்வூட் - லோவர் லோரன்ஸ், பட்டல்கல – என்பீல்ட் ஆகிய பாதைகள் கார்பெட் போட்டு செப்பனிடப்பட்டுள்ளன. 

எனினும், அந்தப் பாதைகளை தொடர்ந்து பிரதேச சபையினால் பராமரிக்க முடியாமல் உள்ளதாகவும், கோடிக் கணக்கான ரூபா செலவில் செப்பனிடப்பட்டுள்ள கிராமிய கார்பெட் பாதைகளை மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறுப்பேற்று பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் இந்நாள் உறுப்பினருமான கே. குழந்தைவேல் ரவி கொண்டு வந்த பிரேரணைக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் தமது ஏகோபித்த ஆதரவை வழங்கியுள்ளார்கள்.

மேலும், பிரதேச சபைக்கு குறைவான வருமானமே கிடைப்பதால் கார்பெட் போடப்பட்டுள்ள 5 பாதைகளையும் பராமரிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. 

அத்தோடு, பிரதேச சபையில் பணி புரியும் ஊழியர்களின் மாதாந்த வேதனத்துக்கு பிரதேச சபைக்குக் கிடைக்கும் வருமானத்திலிருந்து 2025 ஆம் ஆண்டில் 20% அறவிடப்பட்டு வந்தது. 

அந்த நடைமுறை 2026 இல் 40% மாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கிட்டத்தட்ட மாதாந்தம் 9 இலட்ச ரூபா செலுத்த வேண்டியுள்ளது. இது சம்பந்தமாக குழந்தைவேல் ரவி கருத்து தெரிவிக்கையில், பிரதேச சபையின் வருமானத்திலிருந்து ஊழியர்களின் சம்பளத்துக்காக 100 வீதத்தையும் பெற்றுக் கொள்வதில் முதற் கட்டமாக 2025 இல் 20% அறவிடப்பட்டது. 

அது 2026 இல் 40% மாக செலுத்த வேண்டியுள்ளது. அதேபோல், ஒவ்வொரு வருடமும் 20% அதிகரிக்கப்பட்டு முழுமையாக 100 வீதமும் செலுத்த வேண்டியுள்ளது.

எனவே, நோர்வூட் பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிக்க வேண்டிய பொறுப்பும் தேவையும் சபைக்கு இருந்தும், அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. 

பிரதேச சபையின் தலைவராக இருந்த காலப்பகுதியில் தற்காலிக ஊழியர்களுக்கு மாதாந்தம் கிட்டத்தட்ட 5 இலட்ச ரூபா செலவிடப்பட்டு வந்தது. அவர்கள் இப்போது நிரந்தர நியமனம் பெற்றுள்ளதால், மாதாந்த வேதனமும் அதிகரித்துள்ளது.

எனவே, அனாவசிய செலவுகளைக் குறைத்து வருமானத்தை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆகவே, கிராமிய கார்பெட் பாதைகளை மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கொண்டு வருவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் உறுப்பினர்கள் ஏகமனதாக ஒத்துழைத்து ஆதரவு வழங்கியுள்ளார்கள்.

இது தொடர்பாக மத்திய மாகாண பிரதம செயலாளருக்கு விரைவில் கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

சபைத் தலைவர் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும் என்றார்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!