பணவீக்கத்தில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி - நம்பிக்கையின் பாதையில் இலங்கை!

#SriLanka #IMF #Kristalina Georgieva #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
பணவீக்கத்தில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி - நம்பிக்கையின் பாதையில் இலங்கை!

இலங்கை குறுகிய காலத்திற்குள் பொருளாதார மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார். 

இது நாட்டின் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் கூறினார். 

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவர், தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கை மக்களின் மீள்தன்மை மற்றும் சமீபத்திய சவால்களுக்கு அரசாங்கம் விரைவாக பதிலளித்துள்ளதையும் பாராட்டினார். 

70 சதவீதமாக உயர்ந்த பணவீக்கம் இப்போது 2 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றும், பொருளாதார வளர்ச்சி எதிர்மறைப் பகுதியிலிருந்து 5 சதவீதமாக மீண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் தித்வா சூறாவளியைத் தொடர்ந்து IMF 200 மில்லியன் அமெரிக்க டாலர் அவசர நிதி உதவியை வழங்கியதை சுட்டிக்காட்டிய அவர், ரியான நேரத்தில் வழங்கப்பட்ட ஆதரவு பாதிக்கப்பட்ட சமூகங்கள் மட்டும் சுமையைச் சுமக்க விடப்படவில்லை என்பதை உறுதி செய்தது என்றும் கூறினார். 

ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்ற மற்றும் நீண்டகால ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை நோக்கிச் செயல்படும் அரசாங்கத்துடன், இலங்கை இப்போது முன்னேற பாதையை கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4