மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 18 தொழிலாளர்கள் மரணம்
#India
#Death
#Mine
#Workers
#illegal
Prasu
1 hour ago
இந்திய மாநிலமான மேகாலயாவில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 18 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
வெடிப்புக்குப் பிறகு சுரங்கத்தில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது, அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த சட்டவிரோத சுரங்கத்தை இயக்கியவர்களை இந்திய காவல்துறை இன்னும் அடையாளம் காணவில்லை என்றும் அவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து தரப்பினர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )