பிரான்ஸ் அருங்காட்சியக கொள்ளை - சேதமடைந்த கிரீடத்தின் திருத்த பணிகள் நிறைவு

#France #Robbery #museum
Prasu
1 month ago
பிரான்ஸ் அருங்காட்சியக கொள்ளை - சேதமடைந்த கிரீடத்தின் திருத்த பணிகள் நிறைவு

பிரான்சில் லூவர் அருங்காட்சியகத்தில் கடந்த அக்டோபர் மாதம் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது, மீட்கப்பட்ட கிரீடம் ஒன்றின் திருத்த பணிகள் நிறைவடைந்துள்ளது.

கொள்ளையர்கள் தப்பிச் செல்லும் முனைப்பில் கிரீடத்தை தவறவிட்டுச் சென்றிருந்தனர். 

அருங்காட்சியகத்திற்கு வெளியே இருந்து மீட்கப்பட்ட இந்த கிரீடம் சேதமடைந்திருந்தது. சேதமடைந்த அதனை திருத்தும் பணிகள் நடைபெற்று வந்திருந்தது.

56 மரகதங்களும், 1,354 வைரக்கற்களும் என உருவாக்கப்பட்ட விலையுயர்ந்த இந்த கிரீடம் தற்போது முற்று முழுதாக சீரமைக்கப்பட்டுள்ளது. 

கிட்டத்தட்ட அதன் பழைய வடிவத்துக்கே மாற்றப்பட்டதாக லூவர் அருங்காட்சியகம் அறிவித்துள்ளது. 

குறித்த கிரீடம் திருடப்பட்டபோது, 1,354 வைரக்கற்களில் பத்து கற்கள் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!