கனடாவில் விசேட சுற்றி வளைப்பில் 9 பேர் கைது
கனடாவின் சில நகரங்களில் செயல்பட்டு வந்த சட்டவிரோத சூதாட்ட மையங்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒன்பது பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த விசாரணையின் மூலம், சட்டவிரோத சூதாட்ட மையங்களில் இருந்து பணம் வசூலித்து வந்ததாகக் குற்றம் சாட்டப்படும் குழுவை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது, வீடியோ கேமிங் இயந்திரங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்கள், சட்டவிரோத புகையிலை மற்றும் மதுபானங்கள்,கிரிப்டோ வாலெட், பெருமளவு ரொக்கம், வெள்ளிக் கட்டிகள் மற்றும் நாணயங்கள், இரண்டு வாகனங்கள் மற்றும் குறிப்பிடப்படாத அளவிலான கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது மொத்தமாக 22 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனினும், இக்குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே )