இந்தியாவில் 22 வயது இளைஞரின் உயிரை காப்பாற்றிய மெட்டா மற்றும் காவல்துறை
#India
#Police
#Instagram
#Meta
Prasu
1 hour ago
உத்தரப் பிரதேசத்தில் 22 வயது இளைஞன் ஒருவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதை மெட்டா எச்சரித்ததை அடுத்து காவல்துறை அவரை காப்பாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன், “என் அன்பே, நான் இறப்பதற்கு முன் இதுவே எனது கடைசி செய்தி, நான் இறந்த பிறகு எனக்காக பிரார்த்தனை செய், இன்று நான் 50 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளேன், நான் இறந்தாலும் கவலைப்படாதே” என்ற வாசகத்துடன் ஒரு வீடியோவை வெளியிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த இளைஞனுக்கு குடும்பத்தினர் மோட்டார் சைக்கிள் வாங்க மறுப்பு தெரிவித்ததால் இந்த நடவடிக்கையை எடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காவல் தலைமையகத்தில் உள்ள சமூக ஊடக மையத்திற்கு மெட்டாவிலிருந்து மின்னஞ்சல் எச்சரிக்கை வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை நடந்துள்ளது.
(வீடியோ இங்கே )