சிம்புவிற்காக மாநாடு திரைப்படத்தை விட்டுக்கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் மாநாடு.
படத்தில் சிலம்பரசன் மற்றும் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேபோல் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்த நிலையில், மாநாடு படம் வெளியாகி 4 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ள நிலையில், இது தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் வெளிப்படையாக கருத்து ஒன்று தெரிவித்துள்ளார்.
" மாநாடு படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்த பின்னர் படத்தை நிறுத்தி விட்டார்கள். அப்போது படத்தை என்னை வைத்து பண்ணலாமா என்று கேட்டார்கள்.
அப்போது நான், இந்த படம் கட்டாயம் பெரிய வெற்றியை ஈட்டும். வெங்கட் பிரபு சாரிடம் இந்த படத்தை சிம்பு சாரை வைத்து எடுப்பது தான் சரி என்று சொல்லுங்கள். இந்த கதையில் அவர் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று கூறினேன்” என்றார்.
(வீடியோ இங்கே )