தீ விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு. சுவிஸ் விடுதியில் சோகம்

#Death #Switzerland #Accident #New Year #fire
Prasu
5 months ago
தீ விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு. சுவிஸ்  விடுதியில் சோகம்

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கிரான்ஸ்-மொன்டானா நகரில் உள்ள மதுபான விடுதியில் தீ விபத்து நிகழ்ந்தது.

புத்தாண்டைக் கொண்டாட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அங்கு கூடியிருந்தபோது இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் 115க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

ஷாம்பெயின் பாட்டில்களில் பட்டாசு வெடித்ததன் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தீவிபத்து ஏற்பட்ட வாலாய்ஸ் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 13 ஹெலிகாப்டர்கள் மற்றும் 42 ஆம்புலன்ஸ்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4