டக்ளசால் கைதாகப்போகும் சிங்கள அரசியல்வாதி யார்? (வீடியோ இணைப்பு)

#SriLanka
Mayoorikka
6 months ago
டக்ளசால் கைதாகப்போகும் சிங்கள அரசியல்வாதி யார்? (வீடியோ இணைப்பு)

டக்ளஸ் தேவானந்தா கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை மூன்று நாட்களுக்கு விசாரணையில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு விட்டிருந்தது. 

பின்னர் அதனை நீடித்து ஒன்பது நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.

 அதன் பிற்பாடு தான் அவர் தன்னுடைய வழக்கறிஞரை வைத்து நீதிமன்றத்தில் வழக்கை வாதாடுவதற்கு முற்படுத்தலாம்.

அத்தோடு விசாரணையில் மாற்றம் அல்லது வேறு ஏதாவது திருப்பங்கள் ஏற்பட்டால் இந்த விளக்கம் மறியல் காலம் மேலும் நீடிக்கப்படாலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

 தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட கைது துப்பாக்கி பிரபல போதை கடத்தல் கும்பலான மகந்துறை மதுசவிடம் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்ததை அடுத்து இவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


ஆனால் சிலவேளைகளில் இந்த கைதுப்பாக்கி பாதாள உலகம் குழுவினருக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் இருக்கின்றது. முன்னதாக கோத்தபாய அரசாங்கத்தின் காலத்தில் வெள்ளை வேன் கடத்தல்கள் அதிகரித்திருந்தன. 

அவர்களுக்கும் கோத்தபாய குழுவிக்கும் டக்ளஸின் ஈபிடிபி குழுவினருக்கும் தொடர்பு இருப்பதாக பேசப்பட்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் இராணுவத்தினரிடமிருந்து ஒரு சில இடைத்தரகர்கள் மூலம் இந்த ஆயுதங்கள் போதைப் கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கலாம். இது பாதுகாப்பிற்காக ஆளும் கட்சியினர் வழங்கி இருக்கலாம். 

தற்பொழுது அந்த ஆதாரம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ராணுவத்தினரின் ஆயுதங்களுக்கு பொறுப்பாக இருந்த வேறு சில ராணுவ இடைத்தரகர்கள் மூலம் போதைப்பொருள் கடத்தல்கார்களுக்கு கொடுத்திருக்கலாம். இந்த நிலையில் வெளியில் பல ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட வருகின்றன....

இது தொடர்பான மேலதிக தகவல்களை அறிய கீழுள்ள வீடியோவை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4