உத்தரபிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 11ம் வகுப்பு மாணவர்
#India
#Death
#School
#Murder
#GunShoot
Prasu
3 hours ago
உத்தரபிரதேசத்தில் கூட்டுறவு இன்டர் கல்லூரியில் 11ம் வகுப்பு மாணவர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் கர்வா கிராமத்தில் வசிக்கும் சுதிர் பாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், சுதிர் மூன்று நாட்களுக்கு முன்பு தனது கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனுடன் வாக்குவாதம் செய்ததால் பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
(வீடியோ இங்கே )