அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கீஸ் முகமதி கைது
#Arrest
#Women
#Iran
#Nobel
Prasu
18 hours ago
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கீஸ் முகமதியை ஈரானிய அரசாங்கம் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் கோஸ்ரோவ் அலிகோர்டியின் நினைவு விழாவின் போது முகமதி “வன்முறையாக தடுத்து வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
ஈரானின் மிக முக்கியமான மனித உரிமை வழக்கறிஞர்களில் ஒருவரான முகமதி 2023 இல் அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருந்தார்.
கடந்த இரண்டு தசாப்தங்களில் பெரும்பாலான காலத்தை அவர் தெஹ்ரானின் எவின் சிறையில் கைதியாகக் கழித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )