துருக்கி கார்கோ விமானம் விபத்து, பயணித்த அனைவரும் பலி!
அஜர்பைஜானில் இருந்து புறப்பட்ட துருக்கி இராணுவத்திற்கு சொந்தமான C-130 ரக சரக்கு விமானம் நேற்று (11) மாலை மலையில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
விமானக் குழுவினர் உட்பட 20 துருக்கி பணியாளர்கள் C-130 விமானத்தில் இருந்ததாகவும், ஆனால் பிற நாட்டினரைச் சேர்ந்த பயணிகள் தொடர்பில் துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிடவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அஜர்பைஜானில் உள்ள இன்சிர்லிக் விமான தளத்திலிருந்து குறித்த விமானம் புறப்பட்டபோது, ஜோர்ஜியாவின் காகசஸ் மலைகளில் விமானம் காணாமல் போனதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது, துருக்கிய இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு சிறப்பு மீட்புக் குழுக்கள், ஜோர்ஜிய அதிகாரிகளின் உதவியுடன், விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
