இன்றைய ராசிபலன் (31.10.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன
 
                மேஷம்:
அசுவினி: நினைப்பது நடந்தேறும் நாள். தொழில் முன்னேற்றம் அடையும்.
பரணி: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.
கார்த்திகை 1: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். சிலர் புதிய இடம் வீடு வாங்குவீர்கள்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் ஆதாயம் காணும் நாள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.
ரோகிணி: பணியிட நெருக்கடி விலகும். வியாபாரிகளுக்கு முதலீட்டிற்கேற்ப ஆதாயம் கிடைக்கும்.
மிருகசீரிடம் 1,2: நினைத்ததை முடிப்பீர்கள். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: இரண்டு நாளாக இருந்த நெருக்கடி விலகும். மனதில் தெளிவு ஏற்படும்.
திருவாதிரை: பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.
புனர்பூசம் 1,2,3: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும்.
கடகம்:
புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்படவும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.
பூசம்: பணியிடத்தில் எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.
ஆயில்யம்: இயந்திரப் பணியில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது.
சிம்மம்:
மகம்: மகிழ்ச்சியான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொன் பொருள் சேரும்.
பூரம்: கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடியும். சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர்.
உத்திரம் 1: வியாபாரம் முன்னேற்றம் அடையும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: எதிர்ப்பு விலகும் நாள். லாப குருவால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.
அஸ்தம்: திருமண வயதினருக்கு வரன் வரும். அரசுவழி முயற்சி சாதகமாகும்.
சித்திரை 1,2: இழுபறியாக இருந்த வேலை முடியும். மறைமுகமாக தொல்லை கொடுத்தோர் விலகுவர்.
துலாம்:
சித்திரை 3,4: நன்மையான நாள். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகளில் தீர்வு ஏற்படும்.
சுவாதி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
விசாகம் 1,2,3: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.
விருச்சிகம்:
விசாகம் 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். குருப்பார்வையால் நீங்கள் நினைப்பது நடந்தேறும்.
அனுஷம்: செல்வாக்கு உயரும். பலமுறை முயற்சித்தும் நடக்காமல் இருந்த வேலைகள் இன்று நடக்கும்.
கேட்டை: அவசர வேலைகள் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்கும் என்றாலும் வருமானம் திருப்தி தரும்.
தனுசு:
மூலம்: முயற்சியால் வெற்றியடையும் நாள். பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
பூராடம்: வரவேண்டிய பணம் வரும். அரசு வழி வேலை முடியும். செல்வாக்கு உயரும்.
உத்திராடம் 1: மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சகோதரர் உங்களுக்கு உதவியாக இருப்பார்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
திருவோணம்: இரண்டு நாளாக இருந்த குழப்பம் விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும்.
அவிட்டம் 1,2: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கையில் பணம் புரளும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். கையில் எடுத்த வேலைகள் இழுபறியாகும்.
சதயம்: எதிர்பார்த்த பணம் வரும். பெரிய மனிதர்களின் ஆதரவால் மனதில் தைரியம் உண்டாகும்.
பூரட்டாதி 1,2,3: நீண்டநாள் கனவு நனவாகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.
மீனம்:
பூரட்டாதி 4: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.
உத்திரட்டாதி: பணியாளர்களுக்கு வேலைப்பளு உண்டாகும். சிலருக்கு மருத்துவச் செலவு ஏற்படும்.
ரேவதி: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். புதிய முதலீடுகள் இன்று வேண்டாம்.
(வீடியோ இங்கே )
 
                        
                     
                        
                     
                        
                     
                        
                     
                 
                 
                 
                 
                 
                                     
                         
                     
                                     
                                     
                                     
             
                         
                         
                         
                         
                         
                         
             
            