வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? அக்டோபர் 08 (October 08)

#people #history #Lanka4 #World
Prasu
2 weeks ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? அக்டோபர் 08 (October 08)


அக்டோபர் 8 (October 8) கிரிகோரியன் ஆண்டின் 281 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 282 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 84 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

  • 314 – உரோமைப் பேரரசர் லிசீனியசு சிபாலே என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் முதலாம் கான்ஸ்டன்டைனிடம் தோற்றான். இத்தோல்வி மூலம் தனது ஐரோப்பியப் பகுதிகளை இழந்தான்.
  • 1573 – எண்பதாண்டுப் போரில் நெதர்லாந்து முதலாவது வெற்றியை எசுப்பானியாவுக்கு எதிராகப் பெற்றது.
  • 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
  • 1813 – பவேரியாவுக்கும் ஆசுதிரியாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
  • 1821 – பெருவில் ஒசே சான் மார்ட்டின் தலைமையிலான அரசு கடற்படை அமைக்கப்பட்டது.
  • 1836 – இலங்கையில் ஏற்றுமதி, இறக்குமதிகளுக்கு வரி விதிப்பு அமுலாக்கப்பட்டது.[1]
  • 1856 – சீனாவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையே இரண்டாம் அபினிப் போர் ஆரம்பமானது.
  • 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கென்டக்கியில் கூட்டமைப்புப் படைகளின் முற்றுகையைத் தடுத்து நிறுத்தின.
  • 1871 – சிகாகோ பெருந்தீ: சிக்காகோவில் இடம்பெற்ற பெரும் தீயில் 100,000 பேர் வீடுகளை இழந்தனர். விஸ்கொன்சின் மாநிலத்தில் இடம்பெற்ற தீயில் 2,500 பேர் வரையில் உயிரிழந்தனர்.
  • 1879 – பசிபிக் போர்: சிலியின் கடற்படை அங்காமொசு என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பெருக் கடற்படையைத் தோற்கடித்தது.
  • 1895 – கொரியாவின் கடைசிப் பேரரசி மெயோங்சியோங் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் சப்பானியப் படைகளால் கியாங்பொக் அரண்மனையில் வைத்து எரிக்கப்பட்டது.
  • 1912 – முதலாவது பால்கன் போர் ஆரம்பமானது: மொண்டெனேகுரோ உதுமானியப் பேரரசுடன் போர் தொடுத்தது.
  • 1918 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் அமெரிக்கக் கோப்ரல் அல்வின் யோர்க் தனியாளாக 25 செருமனிய இராணுவத்தினரைக் கொன்று, 132 பேரைக் கைப்பற்றினார்.
  • 1932 – இந்திய வான்படை நிறுவப்பட்டது.
  • 1939 – இரண்டாம் உலகப் போர்: செருமனி மேற்கு போலந்தை இணைத்துக் கொண்டது.
  • 1941 – இரண்டாம் உலகப் போர்: ரசுத்தோவ் சண்டயின் ஆரம்பத்தில் செருமனியப் படைகள் அசோவ் கடலை அடைந்து மரியுபோல் நகரைக் கைப்பற்றின.
  • 1944 – இரண்டாம் உலகப் போர்: குரூசிஃபிக்ஸ் ஹில் சண்டை ஆஃகன் நகருக்க்கருகில் இடம்பெற்றது.
  • 1952 – லண்டனில் தொடருந்து விபத்தில் 112 பேர் உயிரிழந்தனர்..
  • 1962 – அல்சீரியா ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.
  • 1967 – கெரில்லா இயக்கத் தலைவர் சே குவேராவும் அவரது சகாக்களும் பொலிவியாவில் கைது செய்யப்பட்டனர்.
  • 1970 – வியட்நாம் போர்: பாரிசில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில், பொதுவுடைமைவாதிகள் அமெரிக்கத் தலைவர் நிக்சனின் அமைதி முன்மொழிவை நிராகரித்தனர்.
  • 1973 – சூயசுக் கால்வாயின் இசுரேலியப் பக்கத்தில் இடம்பெற்ற போரில் 140 இசுரேலியத் தாங்கிகள் எகிப்திய படைகளினால் அழிக்கப்பட்டது.
  • 1982 – சொலிடாரிட்டி தொழிற்சங்கம் போலந்தில் தடை செய்யப்பட்டது.
  • 1987 – விடுதலைப் புலிகள் இந்திய அமைதி காக்கும் படையின் சரக்கு வாகனத்தைத் தாக்கியதில் 8 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
  • 1990 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: எருசலேமில் இசுரேலியக் காவல்துறையினர் கோவில் மலையில் பாறைக் குவிமாடம் மசூதியைத் தாக்கியதில் 17 பாலத்தீனர் கொல்லப்பட்டு 100 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
  • 1991 – குரோவாசியா, சுலோவீனியா மக்கள் யுகோசுலாவியாவில் இருந்து பிரிவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
  • 2001 – இத்தாலியின் மிலன் நகரில் இரண்டு விமானங்கள் வானில் மோதியதில் 118 பேர் இறந்தனர்.
  • 2005 – காசுமீரில் ஏற்பட்ட 7.6 அளவு நிலநடுக்கத்தில் பாக்கித்தான், இந்தியா, ஆப்கானித்தான் ஆகிய நாடுகளில் 86,000–87,351 பேர் வரையில் உயிரிழந்து, 69,000–75,266 வரையானோர் காயமடைந்தனர். 2.8 மில்லியன் பேர் வீடுகளை இழந்தனர்.
  • 2006 – காலி கடற்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்கி 3 கடற்படைக் கலங்களை மூழ்கடித்தனர்.
  • 2016 – மேத்யூ சூறாவளியின் தாக்கத்தால் இறந்தோரின் எண்ணிக்கை 900 ஐத் தாண்டியது.

பிறப்புகள்

  • 1552 – மத்தேயோ ரீச்சி, இத்தாலிய இயேசுசபை மதப்பரப்புனர் (இ. 1610)
  • 1872 – மேரி பென்னிங்டன், அமெரிக்க வேதியியலாளர், பொறியியலாளர் (இ. 1952)
  • 1873 – எய்னார் எர்ட்சுபிரங்கு, தென்மார்க்கு வேதியியலாளர், வானியலாளர் (இ. 1967)
  • 1908 – என். ஆர். இராசவரோதயம், இலங்கை அரசியல்வாதி (இ. 1963)
  • 1908 – கரோலின் அந்தோனிப்பிள்ளை, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 2009)
  • 1920 – பிராங்க் எர்பெர்ட், அமெரிக்க ஊடகவியலாளர், படப்பிடிப்பாளர் (இ. 1986)
  • 1922 – கோ. நா. இராமச்சந்திரன், இந்திய அறிவியலாளர் (இ. 2001)
  • 1924 – திருநல்லூர் கருணாகரன், இந்தியக் கவிஞர் (இ. 2006)
  • 1926 – ராஜ்குமார், இந்தித் திரைப்பட நடிகர் (இ. 1996)
  • 1932 – கென்னத் அப்பெல், அமெரிக்கக் கணிதவியலாளர்
  • 1935 – மில்கா சிங், இந்திய தடகள விளையாட்டு வீரர்
  • 1944 – ராஜ்ஸ்ரீ (இந்தி நடிகை) இந்தித் திரைப்பட நடிகை
  • 1949 – சிகர்னி வேவர், அமெரிக்க நடிகை, தயாரிப்பாளர்
  • 1950 – சு. கலிவரதன், தமிழக எழுத்தாளர்
  • 1969 – டைலன் நீல், கனடிய-அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
  • 1970 – மேட் டாமன், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
  • 1971 – பா. ராகவன், தமிழக எழுத்தாளர்
  • 1977 – லட்சுமி மஞ்சு, இந்திய-அமெரிக்கத் தொலைக்காட்சி நடிகை

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!