ரணில் சிகிச்சை பெற்று வரும் வைத்தியசாலைக்கு சிறப்பு பாதுகாப்பு!
#SriLanka
#Hospital
#Ranil wickremesinghe
#Security
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
2 hours ago

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மருத்துவ சிகிச்சை பெற்று வரும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு சிறப்பு பாதுகாப்புப் பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஏழு சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் நான்கு சிறைக் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அவர் முதலில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த வழக்கு நாளை (26) மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



