ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
தனது பதவிக் காலத்தை முடித்துக்கொண்டு இலங்கையிலிருந்து புறப்படவுள்ளமைக்காக ஜனாதிபதி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போதும் அதற்குப் பின்னரும் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் வழங்கிய ஆதரவை ஜனாதிபதி பாராட்டினார்.
நாட்டில் சுற்றுலா, கல்வி மற்றும் தொழில் பயிற்சி போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வால்ஷிற்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
தனது பதவிக் காலத்தை முடித்து இலங்கையிலிருந்து புறப்படும் எரிக் வால்ஷின் எதிர்கால ஈடுபாடுகள் குறித்து ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



