NPP அரசாங்கத்தின் உறுப்பினர் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் கைது!
#SriLanka
#GunShoot
#NPP
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 year ago
தேசிய மக்கள் சக்தி வெலிகம பிரதேச சபை உறுப்பினர் தாரக நாணயக்காரவின் வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை பகுதியில் 33 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கடந்த 16 ஆம் திகதி அதிகாலை 4.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அந்த நேரத்தில், சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறி, வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வீட்டின் வாசலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
