கொழும்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து - ஒருவர் பலி, பலர் படுகாயம்!

#SriLanka #Colombo #Accident #ADDA #ADDAADS #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 year ago
கொழும்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து - ஒருவர் பலி, பலர் படுகாயம்!

பொரெல்லவில் உள்ள கல்லறை சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று ( 28.07) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றும் ஐந்துபேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

பிரேக்குகள் சரியாக வேலை செய்யாத கிரேன் லாரி பல வாகனங்கள் மீது மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த சாரதி உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள்  கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் பொலிஸார் தொடங்கியுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1753644807.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4