ஆடி அமாவாசை அன்று செய்ய கூடாதவை!
#Tamil
#Lanka4
#Spirituality
#Religion
Prasu
1 week ago

முன்னோர் வழிபாட்டிற்குரிய தக்ஷிணாயன புண்ணிய
காலத்தில் வரும் முதல் அமாவாச, ஆடி அமாவாசை ஆகும். இந்த ஆண்டின் ஆடி
அமாவாசை யூலை 24ம் தேதி வியாழக்கிழமை, நாளை வருகிறது.
பின்வரும் விடயங்கள் செய்யாது இருத்தல் வேண்டும்:
- ஆடி அமாவாசை அன்று நீங்கள் பிறரிடம் கடன் வாங்கவும் கூடாது, நீங்கள் பிறருக்கு கொடுக்கவும் கூடாது.
- பணம் மட்டுமின்றி வீட்டில் உள்ள மற்ற பொருட்களையும் மற்றவர்களுக்கு கடனாக கொடுக்க கூடாது.
- ஆடி முதல் அமாவாசை அன்று வாசலிலும் பூஜை அறைகளிலும் கோலம் இடுதல் கூடாது.
- வாசலில் தண்ணீர் மட்டும் தெளித்து பெருக்கி விட வேண்டும். மறந்தும் கூட வாசலில் கோலமிடுதல் கூடாது.
- ஆடி அமாவசை அன்று, நீங்கள் உங்கள் முன்னனோர்களை வணங்கி படையல் வைக்காமல் இருந்தாலும், கட்டாயமாக காகத்திற்கு உங்கள் வீட்டில் சமைத்த உணவுகளை எச்சில் படாமல் வைக்க வேண்டும்.
- மேலும், அமாவாசை அன்று தலைமுடி வெட்டுதல், நகம் வெட்டுதல் போன்ற செயல்களை செய்ய கூடாது.
- முக்கியமாக, அமாவாசை அன்று வீட்டில் அசைவ உணவுகளை சமைக்கவும் கூடாது, உண்ணவும் கூடாது. ஏனென்றால், முன்னோர்களை வழிபாடும் நாளான அமாவாசை அன்று அசைவ உணவுகளை சமைக்க கூடாது என்பது ஐதீகம்.
- ஆடி அமாவாசை அன்று, காலையில் வீட்டையோ, சமையல் அறையையே அல்லது பூஜை அறையையோ சுத்தம் செய்ய கூடாது.
- காலையில் நீண்ட நேரம் தூங்க கூடாது.
- முன்னோர்களுக்கு படையல் போட்ட உணவுகளை வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது.
- வெளி ஆட்களை வீட்டிற்கு அழைத்து உணவளிக்கக் கூடாது.
- காகத்திற்கு சாதம் வைத்த பிறகு தான் பித்ருக்களுக்கு படையில் இட வேண்டும். அதற்கு முன்பாக படையல் இட கூடாது.
- முன்னோர்களுக்கு படையல் போடும் போது ஒற்றை இலையாக போடக் கூடாது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



