நாரஹேன்பிட்டியில் உள்ள வீட்டில் தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு!
#SriLanka
#Accident
#fire
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
10 months ago
நாரஹேன்பிட்டி காவல் பிரிவின் 397 வத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று (23) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் இருந்த ஒருவர் தீ விபத்தில் சிக்கி தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், பொலிஸாரால் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இறந்தவர் சுமார் 50 வயதுடைய குத்தகைதாரர் ஆவார்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை, சம்பவம் குறித்து நாரஹேன்பிட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
