பலத்த காற்றில் சிக்கிய மீன்பிடி படகு - ஒருவர் மாயம்!
#SriLanka
#Missing
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
12 hours ago

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற படகு இன்று (19) அதிகாலை பலத்த காற்றில் சிக்கியதால், ஒரு மீனவர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அத தெரண வினவியபோது, மீன்வளத் துறையின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, சம்பவம் நடந்த நேரத்தில் படகில் ஆறு மீனவர்கள் இருந்ததாகக் கூறினார்.
இந்தச் சம்பவம் பேருவளைக்கு அருகிலுள்ள கடலில் நடந்தது. படகு ஜூலை 15 ஆம் தேதி துறைமுகத்திலிருந்து புறப்பட்டு இன்று கரை திரும்பியது.
காணாமல் போன நபர் தொடங்கொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



