1.1 பில்லியன் மதிப்புள்ள 35 கிலோ தங்கத்தை நாட்டிற்குள் கொண்டுவந்த நபர் கைது!
#SriLanka
#Arrest
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
8 hours ago

.1.1 பில்லியன் மதிப்புள்ள 35 கிலோ தங்கத்தை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முற்பட்ட நபர் ஒருவர் சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், கார் உதிரி பாகங்கள் போல தோற்றமளிக்கும் 09 பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சாதனங்களில் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததாகவும், அதை நாட்டிற்கு கொண்டு வருவதற்காக தனது சூட்கேஸில் மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
சந்தேக நபர் கிராண்ட் பாஸைச் சேர்ந்த 32 வயது தொழிலதிபர் ஆவார்.
அவர் நேற்று (15) காலை 08.40 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK-650 மூலம் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
அவரிடம் 195 தங்க பிஸ்கட்டுகள் மற்றும் 13 கிலோ நகைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
விமான நிலைய சுங்க அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



