மஹியங்கனையில் கால்வாயில் கவிழந்து விபத்துக்குள்ளான கார் - இருவர் பலி!
#SriLanka
#Accident
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 months ago
மஹியங்கனை - பதுளை வீதியில் பயணித்த கார் ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மஹியங்கனை பொலிஸார், மாபகடவெவ பொலிஸ் பயிற்சி கல்லூரி அதிகாரிகள், கிராம மக்கள் இணைந்து கால்வாயில் கவிழ்ந்த காரை விரைவாக மீட்டனர்.
பின்னர் காருக்குள் இருந்த இருவரும் அம்புலன்ஸ் மூலம் மஹியங்கனை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
