கடல் கொந்தளிப்பாக காணப்படும் - மீனவர்களுக்கு எச்சரிக்கை!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
2 months ago

சிலாபம் முதல் புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடற்கரையோரக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு (50-60) கி.மீ வரை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாகவோ அல்லது சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாகவோ இருக்கும் என்றும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகளில் கடல் அலைகளின் உயரம் சுமார் (2.5 - 3.0) மீட்டர் வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில்மீன்பிடி மற்றும் கடற்படை சமூகம் இது குறித்து கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



